Tuesday, May 5, 2015

என்னவளே

என்னுள் யாவுமாய் கலந்த என்னவளே..
நான் உன்னவனாக காத்திருக்கிறேன்..

காலங்கள் என்னை கடந்து போகிறது..
உன் ஒப்புதலுக்காக ஒரு கவிதையோடு காத்திருக்கிறேன்..

நீ வந்து
என் தோள் சாய்ந்து
என் கை பிடித்து
கொஞ்சம் உன் கண் மை தா..

நிறைவு செய்து கொள்கிறேன்

மிச்ச கவிதையையும்
என் மீதி வாழ்கையையும்...

No comments: