எங்கோ ஒரு மலை கிராமத்தில்
தன் தந்தையின் தோளில்
அமர்ந்து தேர் திருவிழா பார்க்கிறாள் ஒரு குட்டி பெண்...
இந்த முல்லை நில பெண்
தன் அண்ணனின் அன்பையும் வீரத்தையும் பாடிக்கொண்டே சுள்ளிகளை பொறுக்கிச் செல்கிறாள்..
தன் காதலனின்
வருகைக்காக
இந்த கடல் கரையில்
காத்திருக்கறாள்
கனவுகள் கொண்ட ஒருத்தி..
கணவனின் ஏர் கலப்பையின் பின்னே விதை தூவி செல்கிறாள்
அவன் நிழலில் புன்னகைத்து வாழும் பெண்ணொருத்தி..
இந்த பெண்களின் கவிதைக்கும் காதலுக்கும்
யாருமறியாத காரணமாக
இருக்கிறான் ஒரு ஆண்..
பெண்ணாய்
தோழியாய்
தங்கையாய்
காதலியாய்
மனைவியாய்
மாறிப்போகும் பெண்
தெய்வமாயும் வணங்கப்படுகிறாள்..
இவை அனைத்தும் தாங்கும் கோபுரமாகிறான்
ஒரு ஆண்..
தன் தந்தையின் தோளில்
அமர்ந்து தேர் திருவிழா பார்க்கிறாள் ஒரு குட்டி பெண்...
இந்த முல்லை நில பெண்
தன் அண்ணனின் அன்பையும் வீரத்தையும் பாடிக்கொண்டே சுள்ளிகளை பொறுக்கிச் செல்கிறாள்..
தன் காதலனின்
வருகைக்காக
இந்த கடல் கரையில்
காத்திருக்கறாள்
கனவுகள் கொண்ட ஒருத்தி..
கணவனின் ஏர் கலப்பையின் பின்னே விதை தூவி செல்கிறாள்
அவன் நிழலில் புன்னகைத்து வாழும் பெண்ணொருத்தி..
இந்த பெண்களின் கவிதைக்கும் காதலுக்கும்
யாருமறியாத காரணமாக
இருக்கிறான் ஒரு ஆண்..
பெண்ணாய்
தோழியாய்
தங்கையாய்
காதலியாய்
மனைவியாய்
மாறிப்போகும் பெண்
தெய்வமாயும் வணங்கப்படுகிறாள்..
இவை அனைத்தும் தாங்கும் கோபுரமாகிறான்
ஒரு ஆண்..