Tuesday, May 5, 2015

என்னவளே

என்னுள் யாவுமாய் கலந்த என்னவளே..
நான் உன்னவனாக காத்திருக்கிறேன்..

காலங்கள் என்னை கடந்து போகிறது..
உன் ஒப்புதலுக்காக ஒரு கவிதையோடு காத்திருக்கிறேன்..

நீ வந்து
என் தோள் சாய்ந்து
என் கை பிடித்து
கொஞ்சம் உன் கண் மை தா..

நிறைவு செய்து கொள்கிறேன்

மிச்ச கவிதையையும்
என் மீதி வாழ்கையையும்...

காத்திருக்கிறேன்..

நீ என்னை திட்டி சென்றிருக்கலாம்
ஒன்றும் பேசாமல் சென்றதிற்கு பதிலாக..

ஒரு மலர் அவிழ காத்துக்கொண்டிருக்கும்
தேனியை போல..

சூரியன் உயிர்தெழ
மடி திறந்து காத்திருக்கும்
நீலக்கடலை போல..

செம்மணலோடு சேர்ந்தாட
ஏங்கி பொழியும் மழையை போல..

கண்மணி
உன் கை கோர்த்து கவி பேச

கசியும் உயிர் பிடித்து
காத்திருக்கிறேன்...