Tuesday, May 5, 2015

காத்திருக்கிறேன்..

நீ என்னை திட்டி சென்றிருக்கலாம்
ஒன்றும் பேசாமல் சென்றதிற்கு பதிலாக..

ஒரு மலர் அவிழ காத்துக்கொண்டிருக்கும்
தேனியை போல..

சூரியன் உயிர்தெழ
மடி திறந்து காத்திருக்கும்
நீலக்கடலை போல..

செம்மணலோடு சேர்ந்தாட
ஏங்கி பொழியும் மழையை போல..

கண்மணி
உன் கை கோர்த்து கவி பேச

கசியும் உயிர் பிடித்து
காத்திருக்கிறேன்...

No comments: