Friday, June 12, 2015

ஆம்பளனு சொல்லுதடி...

கலப்ப தோள் சொமந்து
காள திமில் பிடிச்சேன்
எளவட்ட கல் தூக்கி
எத்தன பேர எதித்து நின்னேன்..
ஒத்த ஆளா தேர் இழுப்பேன்
ஒண்டி புலியா ஊர் வருவேன்
வீரத்த நெஞ்சில் வெச்சேன்
எங் குடும்பத்துக்கும் கஞ்சி வெச்சேன்.. 
ஓடா ஒலச்சப்பவும்
ஒரு பயலும் சொல்லடி..
நீ குறும்பு பார்வை பாத்து
கொஞ்சி சிரிச்சாக்கா
அரும்பு மீச துருத்தி
நா ஆம்பளனு சொல்லுதடி...

No comments: